June 8, 2025
காரத்தொழுவில்அகஸ்தீஸ்வரர் கோயிலில் முகூர்த்த கால் பூஜை!

காரத்தொழுவில்அகஸ்தீஸ்வரர் கோயிலில் முகூர்த்த கால் பூஜை!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகந்நாயகி அம்பாள் சமேத ஶ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கான கோயில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபுரங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

தற்போது ‘யாக சாலை’ அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ள நிலையில், இன்று காலை அதற்கான முகூர்த்த கால் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரத்தொழுவு சிவா ஐயர் சிவாச்சாரியார் மந்திர யாகம் ஓதி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர், உயரமான மூங்கில் மரத்தை பக்தர் எடுத்து வந்து மலர்கள் தூவி , தீப ஆராதனையுடன் முகூர்த்த கால் மரத்தை நட்டு வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் , ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.