
பெரியகுளம் அருகே திரவியம் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
பெரியகுளம் :
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் டாக்டர்.பாண்டியராஜ், செயலாளர் டாக்டர்.ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர்.
கல்லூரி இயக்குநர் டாக்டர்.இம்மானுவேல் ஜூடா வாழ்த்துரை வழங்கினார். தமிழத்துறை தலைவர் ரீனா வரவேற்புரையாற்றினார். அதனை தொடர்ந்து திரவியம் கல்வி நிறுவனங்களின் அனைத்து கல்லூரி முதல்வர்களும் ஆண்டறிக்கையை வாசித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை தொழில் நுட்ப அலுவலர் பாண்டியம்மாள், கலைஞர்கள் சங்க மாநில துணை செயலாளர், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சுந்தரவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு இன்றைய சூழலில் மாணவிகள் கல்வியுடன் தனித்திறன்களை வளர்த்து கொள்வதுடன் தொழில் முனைவோராக உருவெடுத்து பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என பல கருத்துக்கள் குறித்து பேசினர். மேலும் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், கலப்பு நடனம், கருப்பு வெள்ளை நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் டாக்டர்.வசந்த், உதவி பேராசிரியர்கள் அழகன், எப்சிராணி, வணிகவியல் துறை தலைவர் சிவநேசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.