
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி
“பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்” மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்து வரி பெயர் மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் செய்ய வேண்டி 5 மனுக்களும், புதிய சொத்து வரி விதிப்பு வேண்டி 2 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 4 மனுக்களும், சாலை வசதி வேண்டி 2 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 4 மனுக்களும், உபயோக மாற்றம் வேண்டி 3 மனுக்களும். சுகாதாரம் தொடர்பாக 4 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 24 மனுக்களும் என, மொத்தம் 48 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து மேயர் , நேரடியாக பெறப்பட்டது.

இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன். கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, உதவி ஆணையாளர் சாந்தி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, நிர்வாக அலுவலர் அகமது இப்ராஹிம், உதவி வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர் ஆனந்தம், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.