
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்தவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாரம், இலட்சுமிபுரம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தோட்டக்கலை துணை அலுவலர் சரவணன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ரெங்கராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஆர்.வி.எஸ் தோட்டக்கலை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும். மாணவிகள் இளமதி, ஜெனிபா கிறிஸோலைட், ஜெய் ஸ்ரீ, ஜோஸ்பின் ஜெசிந்தா, கிருபா, கிருபாவதி, ஆகியோர் கிராமப்புற தோட்டக்கலை பணி திட்டத்தின் வாயிலாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மஞ்சள் ஒட்டும். பொறி மற்றும் வேம்பெண்ணையைக் கொண்டு எவ்வாறு எளிதில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் விவசாயிகளும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் சந்தேகத்தைக் கேட்டு அறிந்தனர்.