
மதுரையில் அரசு சார்பில், நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
மதுரை தெற்கு வட்டம், காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி கடந்த 14.10.2024 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்தாருக்கு நிவாரண நிதியாக ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் , வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா உட்பட பலர் உடன் இருந்தனர்.