June 8, 2025
திண்டுக்கல்லில் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல்லில் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் வேடப்பட்டி உம்மு ஸாலம் பள்ளிவாசலில் இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி ஆனது மும்மதத்தினரும் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது ஆரோக்கிய மேரி மாதா கோயில் நிர்வாகிகள் மற்றும் புனித அந்தோனியார் சர்ச் நிர்வாகிகள் மற்றும் சந்தன காளியம்மன் கோயில் நிர்வாகிகள் முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகிகள் அனைவரும் இப்தார் என்னும்நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த அனைவரையும் பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கந்திரி கமிட்டி குழு நிர்வாகிகள் அனைவரும் முன் நின்று வரவேற்றனர்.

பிறகு நிகழ்ச்சி ஆரம்பம் செய்யப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவர் பிச்சை முகமது தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை பள்ளிவாசல் இமாம் கிராத்து ஓதி தொடங்கி வைத்தார் இந்திய தேசிய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவை சேர்ந்த அப்துல் ஜபார் சொற்பொழிவாற்றினார்.

அவர் கூறியதாவது நோன்பு வைப்பதன் நோக்கம் ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழுகை மற்றும் ஜகாத்து ஆகியவற்றை பற்றி விளக்க உரையாற்றினார் பின்பு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கோயில் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர் காயத்ரி மற்றும் கோபால் முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.