June 9, 2025
நிலக்கோட்டையில் மாணவர்களுக்கு அரசு வேலைக்கான தேர்வு குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

நிலக்கோட்டையில் மாணவர்களுக்கு அரசு வேலைக்கான தேர்வு குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

நிலக்கோட்டை,மார்ச்.12-

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் அன்னை அகாடமியின் சார்பாக டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்விற்கான இலவச ஒரு நாள் பயிற்சியும்,கருத்தரங்கமும், அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி திட்ட இயக்குனர் காசிமாயன் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் ஆடிட்டர் சரவணப்பெருமாள்,பேராசிரியர் காந்திமேதி,ஜீ.டி.என் கலைக் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம், மதுரை காமராஜர் மாலை நேரக்கல்லூரியின் பேராசிரியர் மகேந்திர பாண்டியன் , காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ராஜ மோகன் மற்றும் நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளையும், தேர்வை பயமின்றி எழுதுவதற்கான வழிகளையும் கூறி சிறப்பித்தனர்.

நிறைவாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் கிராமபுறத்திலிருந்து படித்து வெற்றி பெற்ற 8 பேர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் பெற்றோர்கள் என 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியர் சந்தியா நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.