June 8, 2025
எல்லா மதத்திலும் விரதம் உள்ளது திருமாவளவன் எம்.பி பேச்சு.

எல்லா மதத்திலும் விரதம் உள்ளது திருமாவளவன் எம்.பி பேச்சு.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பேன், மதுரையில் திருமாவளவன் பேச்சு.
முதல் முறையாக மதுரையில் எவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இன்றைக்கு மதுரையில் பங்கேற்கின்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி
நோன்பு திறப்பது முன்பெல்லாம் கட்சியினரின் இல்லத்தில்தான் நடக்கும்.
30 நாட்களும் உங்களை போல நோன்பு இருக்க முடியாது . அது கடினம்.
என்னால் ,அப்படி இருக்க முடியாது. அதனால் எண்ணிக்கையை 5-க்கு மேல் கூட்ட முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஐந்து நாட்கள் என்பதை தொடர்ச்சியாக கடைபிடித்து வருகிறேன்.

எல்லா மதத்திலும் விரதம் இருப்பது பழக்கம் உள்ளது.. ஆனால், இஸ்லாமிய மதத்தில் கடைபிடிக்கும் இந்த நோன்பு மற்ற மதத்திலிருந்து மாறுபட்டது. சூரிய ஆதிக்கம் இந்த பூமியில் இருக்கிற வரைக்கும் பகலில் உணவை தவிர்ப்பது என்பது இதன் வழக்கம்.
இந்த முறையை மற்ற மதங்களில் கிடையாது..

கவுரவ புத்தர் விரதம் இருக்கும் போது உணவை எடுத்துக் கொள்ளாமல் தானம் உடல் வருத்தி எலும்புத் தோலமாக மாறி கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தார். உடலை வருத்தி கொள்வதால் ஞானம் பெற்றுவிட முடியாது என்று நிலைபாட்டை எடுத்தார்..

30 நாளும் நோன்பு இருக்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் இருக்க முடியவில்லை..
சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கிறது அதற்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் முதல் கட்சியாக நாங்கள் இருக்கிறோம். வரும் ஒன்பதாம் தேதி மத நல்லிணக்க மாநாடு சென்னை மற்றும் மதுரை பழங்காலத்திலும் நடைபெற உள்ளது அதில் நானும் பங்கேற்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.