
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முன்னாள் முதலமைச்சர், அஇ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேரூரையாற்றினார்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
தேனி மண் தெய்வீக மண் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இந்த மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் ஆனார்கள்.
அவர்கள் பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கினார்கள். இரு பெரும் தலைவர்களை முதல்-அமைச்சராக்கி இந்த நாடே செழிப்பாக இருப்பதற்கு அடித்தளமிட்டது தேனி.
மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைய போகிறது. ஒரு துரும்பைக் கூட இந்த மாவட்டத் துக்கு கிள்ளிப்போடவில்லை.
பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததால் தான் இன்றைக்கு நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி உங்கள் முன் நிற்கி றோம். ஆனால், முக.ஸ்டா லின் எப்போது பார்த்தாலும் ‘போட்டோசூட்’ நடத்துகிறார்.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தியது அதி.மு.க. அரசு, 152 அடியாக உயர்த்த தேவையான நடவடிக்கையை நான் எடுத்தேன் அதற்காக டெண்டர் விட்டு பணிகளை எல்லாம் தொடங்கினோம்.
ஆனால் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. பிறகுவந்த தி.மு.க. அரசு அவற்றை கிடப்பில் போட்டுவிட்டது. அதிமு.க.10 அரசு இருந்திருந்தால் 142 அடியில் இருந்து 152 அடியாக நீர் மட்டம் உயர்த்தப்பட்டிருக்கும் என்றார்.
அப்பா’ ஸ்டாலின் எங்கே போனார்?
இன்றைக்கு திராவிட அரசு என்று மாடல் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கி றார். இது திராவிட மாடல் அரசு இல்லை. ஸ்டாலின் மாடல் அரசு. இந்த ஆட்சி வந்த ஒரே ஆண்டில், தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகம் நடப்பதால் அதை தடுத்து நிறுத்துங்கள் என்று நான் எச்சரிக்கை விடுத்தேன். அதை
பொருட்படுத்தவில்லை. எங்கே பார்த்தாலும், போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
கொலை நடக்காத நாளே இல்லை. பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக இருக்கிறது. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை. பள்ளியில்
படிக்கும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
பெற்ற குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அச்சத்தோடு அனுப்புகிறார்கள்.
அதை எல்லாம் ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை. இப்போது ‘அப்பா. அப்பா’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி,
‘அப்பா, அப்பா’ என்று கதறும் போது, இந்த ‘அப்பா ஸ்டாலின் எங்கே போனார் ?.
மதுவின் மூலம் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி :
ஏழை, எளியவர்கள் மதுக் கடைக்கு சென்று மதுபானம் வாங்கும் போது, ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வாங்குகிறார்கள். கேட்டால் மேலிடத்துக்கு போகிறது என்கிறார்கள்.
ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால், ஒரு நாளைக்கு 1 கோடி பாட்டில் விற்கிறது. 1 கோடி
பாட்டில் என்றால் ஒரு நாளைக்கு ரூ.10 கோடி. ஒரு மாதத்துக்கு ரூ.300 கோடி, ஒரு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி. மேலிடத்துக்கு போகிறது. இப்படிப்பட்ட ஆட்சிதேவையா?
73 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்த போதும், தமிழகத்தின்
கடன் கிட்டத்தட்ட ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடி. இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து
4 ஆண்டுகள் முடிகிறது. இதுவரை ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தகவல். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முடிவதற்குள் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி விடுவார்கள். இவ்வளவு கடன் வாங்கி ஏதாவது புதிய திட்டங்கள்
கொண்டு வந்தார்களா?
இல்லை.அஇஅதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மகளிர் இருசக்கர வாகன திட்டம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், திருமண உதவித் தொகை திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பர மாடல் அரசாக உள்ளது என்றார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக 325 அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு சில திட்டங்களை தான் நிறைவேற்றினார். எஞ்சிய அறிவிப்புகளை நிறைவேற்ற வில்லை.மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய நாடகத்தைதி.மு.க. அரசு அரங்கேற்றி வருகிறது.
மதுரை மாநகராட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். மக்களுக்கு தான் வரி போடுகிறார்கள் என்றால், மாடு, குதிரை, பன்றி, நாய், பூனைக்கு எல்லாம் வரி போட்ட பெருமை ஸ்டாலிக்கு தான் சேரும்.
இன்றைக்கு மொழி கொள்கை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். இருமொழிக் கொள்கையை தான் கடைபிடிப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
பாரதிய ஜனதா கட்சியை பார்த்து எடப்பாடி பழனிசாமி நடுங்குவதாக ஸ்டாலின்
சொல்லிக் கொண்டு இருக்கிறார். நாங்கள் நடுங்கவில்லை. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக
இருக்கும் போது கருப்பு பலூன் பறக்க விட்டார்.
ஆளுங்கட்சியாக வந்தபிறகு பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது வெள்ளை குடை
பிடித்தார். ஸ்டாலினை ‘வெள்ளை குடை வேந்தன்’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்றார்..
ஓ.பன்னீர் செல்வத்தை சாடிய எடப்பாடி
பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் போபவர் ஓ.பன்னீர் செல்வம். ஆளுநர் உத்தரவுபடி சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற பொழுது எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓ.பி.எஸ்.. அஇஅதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக , ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களின் ரத்தத்தை, வேர்வை சிந்தி உழைத்த தியாகத்தை வேரறுத்தவர்.
அம்மாவுடைய அரசை வீழ்த்த திமுகவுக்கு துணை போனவர். ஓபிஎஸ் . கட்சிக்கு துரோகம் செய்தது ஓ.பி.எஸ் தான். நான் என்ன துரோகம் செய்தேன். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியவர் ஓ.பி.எஸ், தொண்டர்களுடைய சொத்தான,எம்ஜிஆர் தலைமை கழகத்தை சேதப்படுத்தியவர், ராயப்பேட்டை தலைமை கழகத்தை ரவுடி மூலம் அடித்து நொறுக்கி அலுவலகத்தை திமுகவினரால் சீல் வைத்தது துரோகம் இல்லையா? நான் என்ன துரோகம் செய்தோம்… நாங்கள் கெஞ்சி பார்த்தோம், நீங்கள் கேட்கவில்லை, உங்களால் கட்சிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்றார்.
மேலும் கடந்த காலத்தை எண்ணி பாருங்கள்…அம்மா விசுவாசி…. விசுவாசி… என்று கூறினால் மட்டும் போதுமா? 1989 இதே தேனி மாவட்டத்தில் போடியில் அம்மா நிற்கும் பொழுது நீங்கள் யாருக்காக வேலை செய்தீர்கள். , வெண்ணிறாடை நிர்மலாவுக்கு வேலை செய்தவர் …. சேவல் சின்னத்தில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அம்மா. சீனியர் …சீனியர் என்கிறீர்கள்…. நீங்கள் 2001ல தான் எம்எல்ஏ. நான் 1989 ல் எம்எல்ஏ. 91 இல் சேலம் மாவட்ட செயலாளர், 1991 ல் எம்எல்ஏ, வாரிய தலைவர் ,1998 இல் சீட்டு கேட்காமலே அம்மா எம்பி சீட்டு கொடுத்தாங்க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆனேன். உங்களுக்கு முன்னாள் 14 ஆண்டுகளுக்கு முன்னாலே நான் எம்எல்ஏ …உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.
உங்களுக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றினேன். ஆனால் உங்களுக்கு பதவி இல்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.கட்சியை பார்க்க மாட்டார், அவரைத்தான் பார்ப்பார் …. ஆனால் எனக்கு அப்படி இல்லை. 2001 இல் என்னுடைய தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்தாங்க அம்மா. வேற தொகுதி தர்றதா சொன்னாங்க. கூட்டணி கட்சியாக இருந்தாலும் நான் உழைப்பேன் என்று உழைத்து வெற்றி பெற செய்தேன். இது நான் கட்சிக்கு செய்த விசுவாசம்.. கழகம் என்ன சொல்லுதோ அதை கேட்பதே உண்மையான தொண்டனுக்கு அழகு… அதனால்தான் இன்றும் மக்கள் பேராதரவுடன் இங்கு நிற்கின்றேன்.
துரோகம் செய்தவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று பாருங்கள். நல்லது செய்தால் யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம்… கிளை கழக செயலாளர், ஒன்றிய பொறுப்பு, மாவட்ட பொறுப்பு, மாநில பொறுப்பு, எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதலமைச்சர் இப்படி படிப்படியாக உயர்ந்து உழைப்பால் உயர்ந்து நிற்கிறேன் … நீங்கள் யாரால் வந்தீர்கள் என்று உங்களுக்கு தெரியும். உழைக்கின்றவர்களுக்கு பதவி கிடைக்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக. இந்தியாவில் வேறு எந்த கட்சிகளிலும் அப்படி இல்லை. மூழ்குகின்ற கப்பல் அல்ல.. இது கரை சேருகின்ற கப்பல்… இந்த கப்பலில் ஏறினால் பிழைக்கலாம் …. கப்பலில் ஏறாதவன் நடுக்கடலில் போயிரலாம்… என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள். என்னை பொருத்தவரையில் நான் எந்த மேடையிலும் யாரையும் தாழ்த்தி பேசுவதில்லை. அண்ணன் என்று தான் சொல்லுவேன் … வயதில் மூத்தவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை விட்டுவிட்டு பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றார். கடவுள் இருக்கின்றான் யார் நல்லவர் கெட்டவர் என்று முடிவு செய்யக்கூடிய காலம் வந்துவிட்டது.
2026 இல் வருவேன். மீண்டும் அண்ணாதிமுக ஆட்சி மலரும் ,அனைத்து கழகத் தொண்டர்களும் புத்துணர்ச்சியோடு, செயல்படுவான், இரு பெரும் தெய்வங்களால் உருவாக்கப்பட்ட கட்சியை எந்த கொம்பனாலும்,இந்த கட்சியை வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது. என்னைப்போல் லட்சக்கணக்கான தொண்டர்கள் இயக்கத்தில் உள்ளனர் ரத்தத்தை, வியர்வையாக சிந்தி உழைக்கக்கூடிய தொண்டர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.
ஒரு பயிர் செழித்து வளர்ந்து வருகின்ற பொழுது சில களைகள் முளைக்கத்தான் செய்யும். அவற்றிற்கு உரம் இடும் பொழுது நல்ல பலன் கொடுக்கும். பயிர் செழித்து நன்றாக உள்ள அண்ணா திமுக கட்சி உங்களுடைய கட்சி. இன்று நான் இருப்பேன்.. கீழே இருப்பவர் இந்த பதவிக்கு வரலாம்.வேற எந்த கட்சியிலும் வர முடியாது. இங்கு இருக்கின்றவர்கள் உயர்ந்த பதவிக்கு வரமுடியும், இந்தியாவில் எத்தனை கட்சிகள் உள்ளது, தமிழகத்தில் எத்தனை கட்சிகள் உள்ளது. எந்த கட்சி தலைவனாவது இப்படி சொல்ல முடியுமா? மேடையில் ஸ்டாலின் சொல்வாரா ? உதயநிதி செல்வாரா? இன்பநதி சொல்வாரா ? அண்ணா திமுகவில் நான் ஒரு பொதுச் செயலாளர் தொண்டர்கள் அத்தனை பேரும் தொடர்ந்து பொதுச் செயலாளராக பார்க்க முடியும்.
அதனால்தான் அம்மா எனக்கு பின்னால் இன்னும் 100 ஆண்டு காலம் இந்த இயக்கம் வளரும் என்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்து இரு பெரும் தலைவர்களின் கனவை நினைவாக பாடுபடுவோம் உறுதி ஏற்போம். மக்கள் தெளிவாக உள்ளனர். அடுத்த ஆட்சி அண்ணா திமுக ஆட்சி என முடிவு கட்டிவிட்டனர்.
வெற்றி நிச்சயம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் விழாவை தேனி மாவட்டத்தில் சிறப்பாக எழுச்சியோடு கொண்டாடுவதற்கு மிகச்சிறப்பாக செயல்பாடு செய்த அருமை சகோதரர்கள் இரண்டு மாவட்ட செயலாளர்கள் முருக் கோடை ராமர் மற்றும் ஜக்கையன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து, உறுதுணையாக விளங்கிய ஆர் பி உதயகுமார் மற்றும் இணைந்து பணியாற்றிய கழகச் செயலாளர்கள், கழகத்தின் அத்தனை நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து, இன்றைய தினம் ரமலான் மாதம் நோன்பு இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். முதன்முதலாக அம்மா ஆட்சிதான் ரமலான் நோன்புக்கு விலையில்லா அரிசி கொடுத்த அரசு என்பதனை நினைவு கூறினார்.
இந்நிகழ்வில் தேனி (கி)மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் ஜக்கையன் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரதிமீனா சேகர், முத்தையா, கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன், எம் ஜி ஆர். மன்ற இணை செயலாளர் மாணிக்கம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எதிர்கட்சி துணைத்தலைவர், முன்னாள் அமைச்சர் உதயக்குமார். பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு, தேனி நகர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், தேனி (கி) ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, பெரியகுளம் நகர் கழக செயலாளர் பழனிப்பன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜீ, விஜயபாஸ்கர்,முன்னாள் எம்பி பார்த்திபன் முன்னாள் எம் எல் ஏ க்கள் தவசி, தேன்மொழி, பெரிய புள்ளான்,பெரிய வீரன் நீதிபதி, பி.சரவணன், எஸ். எஸ். சரவணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை தேனி (கி) மாவட்ட செயலாளர் கழகத்தின் போர்வாள் அப்பாஸ் உட்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய ,பேரூர், கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர் , கழக தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.