
பெரியகுளம் அருகே அரசு பள்ளிகளில் கழிப்பறை மற்றும் ஊடாடும் திறன் பலகநடைபெற்றது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக நவீன மயமாக்கப்பட்ட வகையில் பேங்க் ஆப் நியூயார்க் அக்ரோ பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் ரூபாய் 4.40 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் ஊடாடும் திறன் பலகை திறப்பு விழா பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பேபி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிஎன்ஒய் இந்தியா நிர்வாக இயக்குநர் சுதிப்தா ஆத்யா, பிஎன்ஒய் இந்தியா குளோபல் இம்பாக்ட் சிட்டிசன்ஷிப் இயக்குநர் டாக்டர் வித்யாதுரை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தனபாலன் நன்றி உரையாற்றினார்.
வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊடாடும் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்ன ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிஎன்ஒய் இந்தியா நிர்வாக இயக்குநர் சுதிப்தா ஆத்யா, பிஎன்ஒய் இந்தியா குளோபல் இம்பாக்ட் சிட்டிசன்ஷிப் இயக்குநர் டாக்டர் வித்யாதுரை, வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், பசுமை வடுகை அறக்கட்டளை நிறுவனர் மனிதநேய மருத்துவர் செல்வராஜ், பசுமை வடுகை கௌரவ ஆலோசகர் செல்வகுமார பாண்டியன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கௌதம் அசோக்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதி, மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.