
மாநிலத்தின் உரிமையை தமிழகத்தின் முதல்வரும் , தமிழக மக்களும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் நிலக்கோட்டையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!
பிப்.9-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரவஞ்சனையான நீர் மிதிப்பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு உழைப்பாளராக தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த கண்டன பொதுக்கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்றால் ஒன்றிய பாஜக அரசை அலற விட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு தமிழக முழுவதும் ஒரே நாளில் பல இடங்களில் தமிழகம் முழுவதும் திமுக சார்பாக நடைபெற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டார் அதன்படி நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம். ஒன்றிய அரசுக்கும் திமுகவுக்கும் என்ன பிரச்சனை என்றால் 2014,2019 ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிக பெரும்பான்மை வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பிடிக்க முடியாமல் மைனாரட்டி பீகார் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கூட்டணியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.
தகுதியை தனி பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் 40 இடங்களிலும் 100% பாராளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று இருக்கிறோம். அப்படிப்பட்ட மாநிலத்தில் தொடர்ந்து புறக்கணிப்பு செய்து மைனாரட்டி ஆளுகின்ற அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி, வஞ்சாமை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நடத்தினாலும் மாநில சுயாட்சியை ஒருபோதும் திமுகவின் தலைமையில் உள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
அதற்கு தமிழக மக்களும் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒன்றிய அரசு அதிகாரத்தில் இருந்து கொண்டு தமிழகத்தை புறக்கணித்தால் தமிழக மக்களை புறக்கணித்து வந்தால் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி அத்தன திட்டங்களையும் பல்வேறு முயற்சியில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை செய்து அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மருத்துவம் பொருளாதாரம் எல்லாத் துறைகளிலும் புறக்கணித்து வந்தாலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் இருப்பது தமிழகம் தான் என்பதை பாஜக அரசு மறந்துவிடக்கூடாது.
அதன் காரணமாக வயிற்று எரிச்சல் ஏற்பட்டு பாரதிய ஜனதா ஒன்றிய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு தமிழராக இருந்து கொண்டு பீகாருக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் பல கோடியை நிதியாக ஒதுக்கிவிட்டு ஆந்திரா கேரளா தமிழகம் தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் மிகவும் சொற்ப நிதி ஒதுக்கிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வஞ்சகத்தை தமிழக மக்களுக்கு செய்து வருகிறது. திமுக அரசு பொதும தமிழக மக்களுக்கு சிறப்பான தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல திட்டங்களையும் முதன்மையாக கொண்டு சென்று ஆட்சி செய்து வருகிறோம்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்திருப்பது நடந்த பட்ஜெட்டில் டெல்லிக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியதன் எதிரொலி தான். அதேபோன்று உத்திரபிரதேசத்துக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை அதுவும் மக்களிடமிருந்து ஏராளமான ஜிஎஸ்டி வரி உட்பட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தக்கூடிய இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழக மக்கள் தான் அப்படிப்பட்ட தமிழக மக்களுக்கு வரி கொடுக்காமல் ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்கள் உரிமையை பாதுகாக்க பாஜக ஒன்றிய அரசு எதிர்த்து போராடுவோம். தமிழக மக்களே பாரதிய ஜனதாவிற்கு வாக்களிப்பது பாவமன்னிப்பு சேர்ந்து விடும். தமிழகத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஏன் சென்ற மருத்துவமனையை கொண்டு வருவதாக சொல்லிவிட்டு இன்றைய தினம் ஒரு நிதி ஒதுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் எனவே ஒன்றிய அரசை புறக்கணிப்போம்.
தமிழக ஆளுநர் எல்லை மீறி செயல்பட்டதை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வருகிறது அதற்கு காரணம் தமிழக முதல்வர் மாநில சுயாட்சி நிலை நிறுத்துவதற்காக தான். எனவே எந்த வகையிலும் மாநிலத்திற்கான உரிமையை பறிக்க நினைத்தால் எவ்வகையிலான எதிர்ப்பையும் தெரிவிப்போம்.
தமிழகத்தின் முதலாளிகளாக உள்ள அம்பானி போன்றவர்களுக்கு 25000 கோடியை கடன் தள்ளுபடி விட்டு தமிழகத்தில் ஏழை எளிய மாணவ மாணவிகள் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்யாதது ஏன்? தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்கு காலணி ஆதிக்கம் போன்று அடிமைகளா ஏன் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கவில்லை.
மேலும் இது ஜனநாயக நாடு எங்கள் மாநிலத்தில் வரி வசூல் செய்து அதற்குரிய நிதியை ஒதுக்கவில்லை என்றால் இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? நடைபெற்ற பட்ஜெட் இந்தியாவிற்கான பட்ஜெட்டா அல்லது பீகார் பட்ஜெட்டா என கேள்வியை எழுப்பி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன், கரிகால பாண்டியன், கனிக்குமார், முருகன், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், மாவட்ட, ஒன்றிய, பேரூர் கிளை கழக நிர்வாகி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை நன்றி தெரிவித்தார்.