June 9, 2025
வாடிப்பட்டி, பிப்.7- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி பள்ளி கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆலோசனைப்படி தமிழ் கூடல் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். இளங்கோ முத்தமிழ் மன்ற செயலாளர் முனைவர் சங்கரலிங்கம்,மன்ற ஆலோசகர் எழுத்தாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ராணி வரவேற்றார். இந்த விழாவினை மதுரை சி இ ஓ ஏ கல்வி குழும முதுநிலை தலைவர் டாக்டர் அலசி மை ராசா கிளைமேக்ஸ் தொடக்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழி நம் தாய்மொழி.தாய்மொழிக்குரிய மரியாதையை தமிழுக்கும் கொடுக்க வேண்டும். தமிழினை ஆர்வத்துடனும் அக்கறையுடனும் படிக்க வேண்டும் தனித்தமிழ் என்றும் சுவையானது பிறமொழி கலப்பின்றி பேசுவது இனிமையானது. நீராரும் கடலுடுத்த பாடலை படித்து பாருங்கள் அதில் உள்ள இனிமை சிறப்பு காண முடியும். எதை படித்தாலும் முழுமையாக படிக்க வேண்டும் அதன் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும் அப்போதுதான் அதன் சிறப்பை நம்மால் அறிய முடியும் மரம் காய்த்திருக்கிறது என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்லி பாருங்கள் அதற்கு பொருளே வராது. உறவுகளில் அத்தை சித்தி என்று தமிழ் மொழியில்இனிக்க சொல்லும் உறவுமுறையை ஆங்கிலத்தில் ஆன்ட்டி என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறோம். வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ் மொழியின் சிறப்பை உயர்வை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் எழுத்தாளர் சொற்பொழிவாளர் சாவித்திரி பாலசுப்ரமணியம், தன்னம்பிக்கை பேச்சாளர் கவிஞர் நெளஷாத் ஆகியோர் தமிழ் மொழியின் சிறப்பினை பற்றி பேசினர். உலகில் 6809 மொழிகள் உள்ளது என்றும் அதில் 700 மொழிகள் பேச எழுத கூடிய மொழிகள் என்றும் தனி சிறப்பு கூறியது6 மொழிகள் என்றும் அதில் பழமையும் பெருமையும் வாய்ந்த சிறப்புடையது தமிழ் மொழி என்றும் பேசினர். இதில் ஆசிரியர் கணேஷ் மாலா படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன் பனகல் பொன்னையா தமிழ் கூடல் வகுப்பின் நிறைவு விழா நிகழ்ச்சியினை கவிதையாக வாசித்தார். இதில் திருப்புதல் தேர்வுவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கணிப்பொறி ஆசிரியர்கார்த்திக், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் மற்றும் ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.

வாடிப்பட்டி, பிப்.7- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி பள்ளி கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆலோசனைப்படி தமிழ் கூடல் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். இளங்கோ முத்தமிழ் மன்ற செயலாளர் முனைவர் சங்கரலிங்கம்,மன்ற ஆலோசகர் எழுத்தாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ராணி வரவேற்றார். இந்த விழாவினை மதுரை சி இ ஓ ஏ கல்வி குழும முதுநிலை தலைவர் டாக்டர் அலசி மை ராசா கிளைமேக்ஸ் தொடக்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழி நம் தாய்மொழி.தாய்மொழிக்குரிய மரியாதையை தமிழுக்கும் கொடுக்க வேண்டும். தமிழினை ஆர்வத்துடனும் அக்கறையுடனும் படிக்க வேண்டும் தனித்தமிழ் என்றும் சுவையானது பிறமொழி கலப்பின்றி பேசுவது இனிமையானது. நீராரும் கடலுடுத்த பாடலை படித்து பாருங்கள் அதில் உள்ள இனிமை சிறப்பு காண முடியும். எதை படித்தாலும் முழுமையாக படிக்க வேண்டும் அதன் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும் அப்போதுதான் அதன் சிறப்பை நம்மால் அறிய முடியும் மரம் காய்த்திருக்கிறது என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்லி பாருங்கள் அதற்கு பொருளே வராது. உறவுகளில் அத்தை சித்தி என்று தமிழ் மொழியில்இனிக்க சொல்லும் உறவுமுறையை ஆங்கிலத்தில் ஆன்ட்டி என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறோம். வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ் மொழியின் சிறப்பை உயர்வை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் எழுத்தாளர் சொற்பொழிவாளர் சாவித்திரி பாலசுப்ரமணியம், தன்னம்பிக்கை பேச்சாளர் கவிஞர் நெளஷாத் ஆகியோர் தமிழ் மொழியின் சிறப்பினை பற்றி பேசினர். உலகில் 6809 மொழிகள் உள்ளது என்றும் அதில் 700 மொழிகள் பேச எழுத கூடிய மொழிகள் என்றும் தனி சிறப்பு கூறியது6 மொழிகள் என்றும் அதில் பழமையும் பெருமையும் வாய்ந்த சிறப்புடையது தமிழ் மொழி என்றும் பேசினர். இதில் ஆசிரியர் கணேஷ் மாலா படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன் பனகல் பொன்னையா தமிழ் கூடல் வகுப்பின் நிறைவு விழா நிகழ்ச்சியினை கவிதையாக வாசித்தார். இதில் திருப்புதல் தேர்வுவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கணிப்பொறி ஆசிரியர்கார்த்திக், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் மற்றும் ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.

வாடிப்பட்டி, பிப்.7-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி பள்ளி கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆலோசனைப்படி தமிழ் கூடல் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். இளங்கோ முத்தமிழ் மன்ற செயலாளர் முனைவர் சங்கரலிங்கம்,மன்ற ஆலோசகர் எழுத்தாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழாசிரியர் ராணி வரவேற்றார். இந்த விழாவினை மதுரை சி இ ஓ ஏ கல்வி குழும முதுநிலை தலைவர் டாக்டர் அலசி மை ராசா கிளைமேக்ஸ் தொடக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழி நம் தாய்மொழி. தாய்மொழிக்குரிய மரியாதையை தமிழுக்கும் கொடுக்க வேண்டும்.

தமிழினை ஆர்வத்துடனும் அக்கறையுடனும் படிக்க வேண்டும் தனித்தமிழ் என்றும் சுவையானது பிறமொழி கலப்பின்றி பேசுவது இனிமையானது. நீராரும் கடலுடுத்த பாடலை படித்து பாருங்கள் அதில் உள்ள இனிமை சிறப்பு காண முடியும்.

எதை படித்தாலும் முழுமையாக படிக்க வேண்டும் அதன் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும் அப்போதுதான் அதன் சிறப்பை நம்மால் அறிய முடியும் மரம் காய்த்திருக்கிறது என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்லி பாருங்கள் அதற்கு பொருளே வராது.

உறவுகளில் அத்தை சித்தி என்று தமிழ் மொழியில்இனிக்க சொல்லும் உறவுமுறையை ஆங்கிலத்தில் ஆன்ட்டி என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறோம்.

வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ் மொழியின் சிறப்பை உயர்வை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் எழுத்தாளர் சொற்பொழிவாளர் சாவித்திரி பாலசுப்ரமணியம், தன்னம்பிக்கை பேச்சாளர் கவிஞர் நெளஷாத் ஆகியோர் தமிழ் மொழியின் சிறப்பினை பற்றி பேசினர்.

உலகில் 6809 மொழிகள் உள்ளது என்றும் அதில் 700 மொழிகள் பேச எழுத கூடிய மொழிகள் என்றும் தனி சிறப்பு கூறியது6 மொழிகள் என்றும் அதில் பழமையும் பெருமையும் வாய்ந்த சிறப்புடையது தமிழ் மொழி என்றும் பேசினர்.

இதில் ஆசிரியர் கணேஷ் மாலா படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன் பனகல் பொன்னையா தமிழ் கூடல் வகுப்பின் நிறைவு விழா நிகழ்ச்சியினை கவிதையாக வாசித்தார்.

இதில் திருப்புதல் தேர்வுவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கணிப்பொறி ஆசிரியர்கார்த்திக், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் மற்றும் ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.