
போலீசார் வாகன சோதனையில் கேரளாவில் இருந்து உணவு கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு…ஒருவர் கைது, சிறை…வாகனம் பறிமுதல்…
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி கேரளா மாநில எல்லை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கவிளை நான்கு வழி சாலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து உணவு கழிவுகள் கொண்டு வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது கொல்லங்கோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் வாகனம் ஓட்டி வந்த கேரளா மாநிலம்,பாறசாலை பகுதியை சேர்ந்த ஆன்றனி என்பவரின் மகன் சனல்(34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும். குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையை குமரி மாவட்ட மக்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
செய்தி: பொன்.இராஜகோபால்,
உதவி ஆசிரியர், சுதந்திர இந்தியா தினசரி நாளிதழ்.