
போக்குவரத்து காவல் உதவிபெண் ஆய்வாளர் வயிற்று வலி காரணமாக உயிரிழப்பு.
அரசு மரியாதையுடன் போலீசார் 21,குண்டுகள் முழங்க தாராபுரம் எரிவாயு மயானத்தில் தகனம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த தேங்காய் வியாபாரி முருகேசன் மனைவி சுதா என்ற காவலர் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக தாராபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டிருந்தார் நிலையில் இன்று திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை திண்டுக்கல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான தாராபுரம்.ராஜா,நகரில் உள்ள அவரது வீட்டிற்கு பூத உடலை கொண்டு வந்தனர். அங்கு அவரது பூத உடலுக்கு பொதுமக்கள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு இன்று மாலை ஆறு மணிக்கு மேல் உடுமலை சாலையில் உள்ள எரிவாயு மயானத்தில் தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் 21-குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது இதில் தாராபுரம், மூலனூர்,குண்டடம் அலங்கியம் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் வந்திருந்தனர்.