
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புது ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புது ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே ஆயக்குடி பேரூர் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றன
தொடர்ந்து ஆயக்குடி பேரூர் செயலாளர் வழக்கறிஞர். சசிகுமார் மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி நிருபர் : நா.ராஜாமணி