
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உட்பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பாக புத்துலக தொலைநோக்காளர் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து இரயிலடிச்சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி கட்சி கொடிகளை ஏந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர்
அபுல் கலாம் ஆசாத் மண்டல துணைச் செயலாளர் ஜலாலுதீன் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் விசிகவின் அனைத்து உட்பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பழனி நிருபர் : நா.ராஜாமணி