June 8, 2025
ரயில்வே துறைக்கு மும்பை தமிழரின் ஆதங்கக் கடிதம்

ரயில்வே துறைக்கு மும்பை தமிழரின் ஆதங்கக் கடிதம்

மும்பை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை புறக்கணித்து, தமிழ்நாடு மக்களை அவமதித்து வரும் மத்திய இரயில்வே மற்றும் ரயில்வே போர்டு நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் -மும்பை விழித்தெழு இயக்கம்

மும்பை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை புறக்கணித்து, தமிழ்நாடு மக்களை அவமதித்து வரும் மத்திய இரயில்வே மற்றும் ரயில்வே போர்டு நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் ஞாயிறுக்கிழமை மாலை 5:30 மணிக்கு தாராவி, 90 அடி சாலையில் உள்ள காமராஜர் (தமிழ்) பள்ளியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டை மும்பை விழித்தெழு இயக்கம் செய்துள்ளது என முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் தெரிவித்துள்ளார் .

கோரிக்கை:-

சுமார் 50 வருடங்களுக்கு மேல்

1) ரயில் எண்: 16339 மும்பை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (தர்மாவரம், ஹிந்தாப்பூர், கிருஷ்ண ராஜபுரம் வழி) 4 மாநில வழியாக செல்கிறது. நேரத்தை மாற்றி வேகத்தை அதிகரித்து இயக்க வேண்டும். இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் மேலும் 8:30 மணிக்கு புறப்படும் நேரத்தை மாற்றி இரவு 11 மணிக்கு அல்லது காலை 8 மணிக்கு இயக்க வேண்டும்.

2) மும்பை – தென்தமிழகம் இடையே தீபாவளி, சபரிமலை, கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தமிழ் புத்தாண்டு, கோடைவிடுமுறை, தைப்பூசம் நிகழ்வுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

3) ரயில் எண்: 11301 மும்பை – பெங்களூரு உதயன் எக்ஸ்பிரஸ் சேலம் வரை நீடிக்க வேண்டும்

4) ரயில் எண்: 22157 மும்பை – சென்னை ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்.

5) மும்பை – சென்னை வழித்தடத்தில் வந்தேபாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும்.
6) மும்பை -தமிழ்நாட்டுக்கு ராஜதானி, ஹம்சபார், கரிப்ரத் போன்ற அதிவேக குளிர்சாதன ரயில்களை இயக்க வேண்டும்.
7). ரயில் எண்: 22113 எல் டி டி – கொச்சுவேலியை நாகர்கோயில் வழியாக நெல்லை வரை நீடிக்க வேண்டும்.
8) ரயில் எண் 11021 தாதர் – நெல்லை சாளுக்கியா எஸ்பிரெஸ்யை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்ச்சத்திரம், தென்காசி, செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும்
9) ரயில் எண்: 12619 & 12133 மும்பை – மங்களூரு ரெயிலை ராமேசுவரம் வரை (வழி பாலக்காடு ,பொள்ளாச்சி, பழனி, மதுரை நீட்டித்து) வாரத்தில் 4 நாட்களுக்கும், மற்ற 3 நாட்கள் நெல்லை /தூத்துக்குடி வரையும் நீட்டித்து இயக்க வேண்டும். நெல்லை /தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும் ரெயில் கொல்லம், செங்கோட்டை, தென்காசி, அம்பை, சேரன்மகாதேவி வழியாக இயக்கப்பட வேண்டும்,

ரத்து செய்துள்ள
1) ரயில் எண்: 16381 மும்பை -கன்னியாகுமரி ரயிலை பழைய வழித்தடத்தில் கன்னியாகுமரி -புனே க்கு பதிலாக மும்பை வரை இயக்க வேண்டும்
2) ரயில் எண்: 01143 மும்பை தூத்துக்குடி ரயிலை மறுபடியும் இயக்க வேண்டும்

மும்பையில் 80 – 90 லட்ச தென்னிந்திய மக்கள் வாழ்கிறார்கள் இதில் தமிழர்கள் மட்டுமே 35 -40 லட்ச மக்களுக்கு மேல் மும்பையில் வாழ்கிறார்கள்

இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மும்பை -தமிழ்நாடு பயணிகள் பயனடைவதோடு, மேலும், தாயகம் சென்று வரும் ஊர் பொதுமக்களின் போக்குவரத்து குறை தீர்த்திடவும்,
மத்திய இரயில்வே மற்றும் ரயில்வே போர்டு
நிர்வாகத்தைக் கண்டித்து
மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும்
பொதுமக்கள் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான ஆலோசனை கூட்டத்தில். அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மும்பை விழித்தெழு இயக்கம் / MVI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.