
பழனிக்கு ஐயப்ப பக்தர்கள் அதிகம் வருவதையொட்டி பக்தர்கள் பாதுகாப்பிற்க்கு காவல்துறை நடவடிக்கை!
பழனி அடிவாரம் பகுதிகளில் உள்ள கார் பார்க்கிங் மற்றும் கட்டண கழிப்பறை, குளியல் அறை வைத்திருப்பவர்களை அடிவாரம் நகர காவல்துறை ஆய்வாளர் மணிமாறன், அடிவாரம் சார்பு ஆய்வாளர்கள் ராஜ்குமார், ரஞ்சித் வரவழைத்து கூட்டம் நடத்தினர்.

அதில் பக்தர்கள் வருவதற்கு பாதுகாப்பாக இருக்க சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி மேலும் கழிப்பறை மற்றும் குளியலறைக்கு பாதுகாப்பு பெட்டி அமைக்க கூறியும் பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலரை நியமிக்க ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்புக்காக அறிவுறுத்தப்பட்டது.