
மக்கள் உரிமைகள் கழக மாநில தலைவர் சபரி ராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா பசுமை புரட்சி நாளாக கொண்டாபட்டது.
மக்கள் உரிமைகள் கழகத்தின் மாநில தலைவர் சபரி ராஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று பசுமை புரட்சி நாயகன் நாளாக கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, பழனி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள மக்கள் உரிமைகள் கழக அலுவலக வளாகத்தில் மரம் நடு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில், மாநிலத் துணைச் செயலாளர் பரிதா சேக்முகமது, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேக்முகமது, மாவட்ட செயலாளர் மற்றும் செய்தியாளர் வின்னர்மணி, மாவட்டத் துணைத் தலைவர் கார்த்தி, நகரத் தலைவி கங்காதேவி, பைரோஜா, நாகவேணி, ராஜசேகர் உள்ளிட்ட பல மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சபரி ராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா பழனியில் மரம் நடு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.






