
மேலவாணியங்குடஸ்ரீ ஷிரடி சாய்பாபா ஆலய 107 வது மகா சமாதி நாளை முன்னிட்டு கலாசாபிஷேக விழா
சிவகங்கை மாவட்டம் மேலவாணியங்குடி நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 16ம் தேதி 02/10/2025 வியாழக்கிழமை அன்று ஸ்ரீ ஷிரடி சாய்பாபா ஆலயத்தில் பாபாவின் 107வது மகா சமாதி நாளை முன்னிட்டு கலசாபிஷேகமும் சிறப்பு ஹோமமும் நடைபெற இருக்கிறது
அன்று பகல் 12 மணியளவில் மாபெரும் அன்னதானம் நடைபெற இருக்கிறது பொதுமக்கள் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருளை பெறுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது,
நிகழ்ச்சி நிரல் (02.10.2025, வியாழக்கிழமை)
காலை 7.45 மணி – காலை ஆரத்தி
காலை 9.00 மணி –விக்னேஸ்வர பூஜை அபிஷேகம்
மதியம் 11.00 மணி – பகல்ஆரத்தி
மதியம் 12.00 மணி – அன்னதானம்
மாலை 5.45 மணி – மாலை ஆரத்தி
இரவு 7.15 மணி – இரவு ஆரத்தி
இந்த நிகழ்வில் மாபெரும் அன்னதானம் மதியம் 12.00 மணியளவில் நடைபெறும். இதில் சாய்பாபா பக்தர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
கோவில் நிர்வாகம் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பாபாவின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.






