March 2, 2026
ஆசிட் ஊற்றி மரத்தை கொல்ல முயற்சி..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

ஆசிட் ஊற்றி மரத்தை கொல்ல முயற்சி..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

மதுரை :

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி வீதி நகைக்கடை பஜாரில் வெயிலுக்கு நிழல் தரும் வகையில் வேம்பு புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன.

இதை தங்கள் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே நிழல்தரும் மரங்களை, சிலர் கொல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அப்பகுதி நகை கடை முன்பாக நன்கு வளர்ந்து நிலையில் உள்ள மரத்தை ஒன்றை சுத்தியலால் துளையிட்டு ஆசிட் ஊத்திய வீடியோவானது இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து, மதுரை தெற்கு வாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்பு, கடம்ப மரங்கள் நிரம்பி இருந்த மதுரை மீட்டெடுக்கும் வகையில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் பல்வேறு இடங்களில் மரங்களை நட்டு, அதன் அவசியங்கள் குறித்து உணர்த்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக தனியார் அப்புறப்படுத்திய மரத்தினால் தன் உயிரையே வைத்துக் கொண்டால் ஒரு இளைஞர் மரங்களை அழிப்பது கொலைக்கு சமம் என, எனவே அதனை அளிக்கும் முயற்சி ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *