March 3, 2026
பெரியார் பிறந்த நாள் :

பெரியார் பிறந்த நாள் :

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகம்,மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புக்கள் மற்றும் பேனாக்கள் வழங்கி கொண்டாடினர்.

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக,அதிமுக, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக , மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பேனாக்கள் வழங்கி கொண்டாடினர்.
மேலும், தமிழகத்திற்கு போராடிய தந்தை பெரியாரின் புகழ் வாழ்கவே, வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே என கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *