March 4, 2026
அலங்காநல்லூர் அருகே தாதக்கவுண்டன் பட்டியில் அமைந்துள்ளஅருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் - ஸ்ரீ கோடாங்கி அம்மன் - ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ கன்னிமார் ஆலய கும்பாபிஷேகம் :

அலங்காநல்லூர் அருகே தாதக்கவுண்டன் பட்டியில் அமைந்துள்ளஅருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் - ஸ்ரீ கோடாங்கி அம்மன் - ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ கன்னிமார் ஆலய கும்பாபிஷேகம் :

அலங்காநல்லூர், செப்: 12.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், தாதகவுண்டன்பட்டியில் அமைந்துள்ளஅருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஸ்ரீ கோடாங்கி அம்மன் ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ கன்னிமார் கள் மற்றும் 21 தெய்வங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆலய திருக்குறள் நன்னாரி நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா என்றழைக்கப்படும் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, பத்தாம் தேதி புதன்கிழமை மாலை நாலு மணி அளவில் மங்கல இசையுடன் கிராம தெய்வங்களுக்கு கனிவைத்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி கோவில் வீட்டிலிருந்து கோவிலுக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, அன்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் முதல் கால யாக வேள்வி மகா சங்கல்பம் மகா தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து, வியாழக்கிழமை விநாயகர் வழிபாடு மகா சங்கல்பம் கர்ண வழிபாடு இரண்டாம் கால யாக வேள்வி துவங்கியது தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டன.

அன்று மாலை மூன்றாம் காலையாக வேள்வி அன்று இரவு எந்திரம் ஐம்பொன் நவரத்தினம் வைத்து என் வகை மருந்து சான்றிதழ் நடைபெற்றன.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை விநாயகர் வழிபாடு மகா சங்கல்பம் எல்லாம் வல்ல ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு உயிர் ஊட்டுதல் கோ பூஜை கன்னியா பூஜை சுமங்கலி பூஜை கனி மூலகை வேள்வி நிறைய வியளித்தல் வழிபாடுஅதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் கடம்புரப்பாடு கலச விமானம் சென்றடைந்தது தொடர்ந்து, காமாட்சி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலஸ்தானத்தில் அலங்காரம் மற்றும் வளர் போற்றி வழிபாடு அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை, தாதக் கவுண்டன்பட்டி.கோவிலூர்.வைகாசி பட்டி பாலமேடு, லிங்கவாடி ஐந்து ஊர் பங்காளிகள் மற்றும் அனைத்து கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *