
பழனி செங்கல் சூளை சேம்பர் பிரச்சனை- பேச்சுவார்த்தை முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தர்ணா போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!
பழனி ஒன்றியம் வடக்கு வாடிப்பட்டி கிராமத்தில் சட்ட விதிகளுக்கு புறம்பாக நிறுவப்பட உள்ள செங்கல் சூளை , பசுமை தீர்ப்பாயம் விதிகளுக்கு மாறாகவும் 2022 சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவும் உள்ளது. மேலும் சூளை அமைய உள்ள இடத்திலிருந்து 400 மீட்டருக்கு உள்ளாகவே ஊர் மற்றும் கோயில்கள், குளங்கள், பழ தோட்டங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய கரும்பு ஆலைகள் அமைந்துள்ளது. எனவே செங்கல் சூளை அமைவதற்கு தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 15 ல் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் தொடர்ந்து வட்டாட்சியர், கோட்டாசியர் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதிகாரிகள் தரப்பில் எந்த வகையான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று 8 9 2025 அன்று தர்ணா போராட்டத்தை நடத்துவதும் இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது என்றும் முடிவு செய்ததன் அடிப்படையில் இந்த தர்ணா போராட்டம் பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்குவதற்கு முன்னதாகவே தாசில்தார் நடத்திய மிக நீண்ட பேச்சு வார்த்தையில் செங்கல் சூளை அதிபர்களும், விவசாய பிரதிகளும், வட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பேச்சு வார்த்தையின் முடிவாக வரும் செப்டம்பர் 17ஆம் தேதிக்குள் செங்கற் சூலை அமையும் பகுதியை ஆய்வுக்கு உட்படுத்துவது. அதுவரையிலும் செங்கல் சூளை கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பது .ஆய்வின் முடிவின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தாசில்தார் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ் கிருஷ்ணன் தலைமையேற்றார்.
வாடிப்பட்டி கிளை செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எம். ராமசாமி மாவட்ட தலைவர் என்.பெருமாள் பழனி முன்னாள் நகர்மன்ற தலைவர் வரத ராஜமாணிக்கம், மாதர் சங்க மாவட்ட நிர்வாகி கௌரி. விவசாய சங்க ஒன்றிய நிர்வாகிகள் கோப்பனன், பாண்டியன் , குட்டி என்ற கோபாலகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.






