
நலத்திட்ட உதவிகள்:
காரியாபட்டி – ஏப் 19.
விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சி நியூ லைப் பவுண்டேசன் சார்பில் ருத்ரா திட்டத்தின் சார்பில் நரிக்குடி அருகே கல்வி மடையில் சிறுநீரக நோய் பரிசோதனை முகாம் நடை பெற்றது. முகாமில், 200க்கு மேற்பட்ட நபர்களுக்கு டாக்டர். காமாட்சி சங்கர் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
மேலும், சிறுநீரக பாதிப்பு ள்ள நபர்களுக்கு நோய் தடுப்பு குறித்த மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, லைப் பவுண்டேசன் நிர்வாகிகள் மற்றும் கிராம இளைஞர்கள் அமைப்பினர் செய்திருந்தனர்.