
நாட்டு நல பணித்திட்ட தொடர்பு அலுவலர் பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி இவர் 2025 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றுள்ளார்
திருநெல்வேலி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலரும் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான திரு ஆறுமுகசாமி அவர்கள் பள்ளிக்குச் சென்று பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி இவாஞ்சலின் பட்டதாரி ஆசிரியர் திரு பக்கிர் மைதீன் முதுகலை ஆசிரியர் திரு செந்தில் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்






