March 5, 2026
காரை ஒப்படைக்க விஜய் கட்சியினர் தீவிரம் !

காரை ஒப்படைக்க விஜய் கட்சியினர் தீவிரம் !

மதுரை :

விஜய் மாநாட்டின் போது கார் மீது கொடிக்கம்பம் விழுந்த விவகாரம் – பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர் அவரது விருப்பப்படி, புதிய காரை தேர்வு செய்த நிலையில் விரைவில் விஜய் கையால் கார் ஒப்படைக்க தவெக நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலின் முன்பு கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் உசிலம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரது கார் முற்றிலும் சேதமடைந்தது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட தினேஷ்குமார் – க்கு கார் வாங்கி தரப்படும் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் விருப்பப்படி கார் ஒன்றை தேர்வு செய்ய சொல்லி, தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் தலைமையில் காருக்கான தொகையை வழங்கினர்.

மேலும் காரை தவெக தலைவர் விஜய் – கையால் பெற வேண்டும் என, பாதிக்கப்பட்ட நபர் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதற்கான முயற்சிகளையும் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் கார் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *