
கொட்டும் மழையிலும் மரக்கன்றுகள் நட்டு சுதந்திர தினம் கொண்டாடிய நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக திட்ட அலுவலர் திரு செந்தில் அவர்கள் கொட்டும் மழையிலும் மரக்கன்றுகளை நட்டு சுதந்திர தினத்தை கொண்டாடினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இன்டீரியர் டெக்கரேஷன் அசோசியேஷன் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.






