March 2, 2026
ஓரணி​யில் தமிழ்​நாடு, கம்பத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை

ஓரணி​யில் தமிழ்​நாடு, கம்பத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை

“ஓரணி​யில் தமிழ்​நாடு” திமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல்
தேனி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் வீட்டிலிருந்து தொடங்கியது

தமிழகத்​தில் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் நடை​பெறுகிறது. அடுத்த தேர்​தலிலும் வெற்றி பெற்று ஆட்​சியை தக்க வைக்​கும் வகை​யில் திமுக பல்​வேறு முன்​னெடுப்​பு​களை செய்து வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக, ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற பெயரில், வாக்​குச்​சாவடிதோறும் 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக உறுப்​பினர்​களாக்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் மதுரை​யில் நடை​பெற்ற திமுக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் அறி​வித்​தார்.

இதையடுத்​து, இந்த உறுப்​பினர் சேர்க்கை திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று முன் தினம் சென்​னை​யில் தொடங்கி வைத்தார். இதற்​காக, திமுக தகவல் தொழில்​நுட்ப அணி சார்​பில் தொகு​திக்கு ஒரு​வர் என 234 பேருக்கு பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ளதுடன், உறுப்​பினர் பதிவுக்​கென தனி செயலி​யும் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில் ஓரணியில் தமிழ்நாடு எனும் முன்னெடுப்பில், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் நா.இராமகிருஷ்ணன் அவர்களும் அவரது குடும்பமும் தங்களை கழத்தில் புதுப்பித்துக் கொண்டனர். இதையடுத்து கம்பம் வடக்கு நகர செயலாளர் எம்.சி வீரபாண்டியன் அவர்களது குடும்பமும், தெற்கு நகரச் செயலாளர் சி.பால்பாண்டி அவர்களது குடும்பமும் தங்களை கழத்தில் புதுப்பித்துக் கொண்டனர்.

நிகழ்வினை கம்பம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வி.ஜெயன் துவக்கி வைத்தார், கம்பம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி பார்வையாளர் திலீபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குரு குமரன் மற்றும் வடக்கு, தெற்கு நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *