
தென்கரை பேரூராட்சி பகுதியில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம்:
தேனி மாவட்டம், பெரியகுளம் தெற்கு ஒன்றியம், தென்கரை பேரூர் கழக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தென்கரை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் செல்வக்குமார் தலைமையில்
“நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு ” எனும் தலைப்பில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர்,தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தலைமைக் கழக பேச்சாளர் குமரி பிரபாகரன், சுருதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினர்.2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் எனகேட்டுக்கொள்ளப்பட்டது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப் கான், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ்,தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் ,தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி,பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தென்கரை பேரூராட்சி 2 வது வார்டு உறுப்பினர் மு. தேவராஜ், மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி துணை அமைப்பாளர்கள்,பேரூர் கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.