
வாடிப்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி, ஜூன்.4-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பேரூர் செயலாளர் மற்றும் பேரூராட்சி தன் தலைவர் மு.பால் பாண்டியன் தலைமையில், ஒன்றியச் செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தன் தலைவர் கிருஷ்ணவேணி, முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் வக்கீல் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பும், புஷ்பகம் குழந்தைகள் காப்பகத்தில் பிரியாணியும், பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ பிரியாணியும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், கவுன்சிலர்கள் கார்த்திகா ராணி, மோகன்,சரசுராமு, நல்லம்மாள், மீனா, தி.மு.க நிர்வாகிகள் அரவிந்த், கஜேந்திரன், ராம்மோகன், பன்னீர், ,மருதுபாண்டி, ஜெம்மணி, எம் எஸ் முரளி, வினோத், ராஜேந்திரன், ஆறுமுகம், ராஜசேகர், மூர்த்தி பிரபு, விஜி, ராம்ராஜ், கார்த்தி, சிவா, கண்ணன், மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.