
நிலக்கோட்டையில் 5ம் தேதி ரோசாப்பூத்துரை என்று அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப் பிறந்த தின விழா
நிலக்கோட்டை, ஜூன்.4-
இந்தியாவில் பிரமலைக் கள்ளர் இனத்திற்கும் மற்றும் டி.என்.டி மக்கள் மீது அநீதியாக சுமத்தப்பட்ட குற்றப்பரம்பரை சட்டம் முதலில் எதிர்த்து பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் வாதாடிய போற்றுதலுக்குரிய சுயநலமற்ற மேன்மைமிகு ஜார்ஜ் ஜோசப் அவர்களின் பிறந்த தினம் 5.6 1887 ஆம் தேதியில் பிறந்தார்.
அவரது 138 வது பிறந்த தினத்தை நிலக்கோட்டை, சுண்ணாம்பு காளவாசல், அணைப்பட்டி ரோடு பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு அலுவலகத்தில் வருகிற 5.6.2025 அன்று பிறந்த தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்பு விழா காலை 11 மணிக்கு நடைபெறுகிறது என்ற தகவலை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தெரிவித்தார்.
அப்போது உடன் மாநில பொருளாளர் இளங்கோ, மாநிலச் செயலாளர் முருகன், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.