
பண்ருட்டியில் வட்டாட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
கடலூர் மே 30
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாட்சியரிடம் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்டத் தலைவர் ஆர். .எஸ். தேவா தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 2 தேதி அரசு பள்ளி துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி திறக்க உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி குடிநீர் மற்றும் மதிய உணவு கழிப்பிட வசதி செய்து தரக்கோரி பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் பள்ளிகள் திறக்கும் முன் பள்ளிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
தலைமை ஆர் எஸ் தேவா கடலூர் மாவட்ட தலைவர் சிவ சிவ நாகராஜ் மாவட்டத் தலைவர் ஆன்மீக பேரவை சிவ சிவ சரவணா சாமி மாவட்ட செயலாளர் ஆன்மீக பேரவை குமரன் பண்ருட்டி நகர அமைப்பாளர் சங்கர் பண்ருட்டி நகர துணை தலைவர் குரு கதிர்வேல் காளி வழிபாடு மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.