
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம்t ரங்கப்பனூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணையின்படியும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படியும் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம்_ கார்த்திகேயன் B.Sc MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி காலை 10 மணி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தலைவர் R.M.S.K. அர்ச்சனா காமராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், தாய்மார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் குற்றங்கள், தாய் தந்தை இல்லாத குழந்தைகள், வளரினம் பெண்கள் கருவுற்று இருப்பதை தடை செய்தல். குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துதல். போதைப் பொருட்கள் முற்றிலும் தடை செய்தல். முடிவில் ஊராட்சி செயலர் S. திருமால்வளவன் நன்றி கூறினார்.