
இராமநாதபுரம் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் B.மலர்விழி ஜெயபாலா அவர்களின் தலைமையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்.
இராமநாதபுரம் தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் B. மலர்விழி ஜெயபாலா தலைமையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான இன்று பசி எனும் பிணியை போக்கிட இராமநாதபுரம் மாவட்டம் வழிவிடு முருகன் கோவிலில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கபட்டது.
இந்நிகழ்வு இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கா.செல்வ ரஞ்சன் தாஸ் ஏற்பாட்டில், இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி பொருளாளர் தமிழ்ச்செல்வன், இணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, மதன்ராஜ், நாகார்ஜூன், துணைச் செயலாளர் பிரவீன் குமார், கார்த்திக் ராஜ் இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தளபதி தமீம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுகுமார், மாவட்ட தொழிலாளர் அணி பிரவீன், மாவட்ட சுற்றுசூழல் அணி விமலா, மாவட்ட பயிற்சிபாசறை அணி அமைப்பாளர் அருண்குமார்,மண்டபம் ஒன்றிய செயலாளர் ரெய்மண்ட், தங்கச்சிமடம் கிளை செயலாளர் ராகுல், பட்டினம்காத்தான் கிளை செயலாளர் தங்கம் மதன், இராமநாதபுரம் நகர் தொண்டரணி அமைப்பாளர் விஜயதயலான் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.