
பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்ரா பெளர்ணமி சிறப்பு பூஜை பக்தர்கள் கிரிவலம்.
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலைமேல் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் மலைக்கோயிலில் நேற்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் மற்றும் தீப வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து முன்னாள் ஆவின் தலைவரும், நகர்மன்ற தலைவருமான ஓ.ராஜா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.