
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கும் தமிழன் வடிவேல் அவர்களின் தொடர் அன்னதான நிகழ்ச்சி.
தென்னிலை கதிர் பத்திரிகை, ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் வசந்தம் சமூக நல வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 30-04-2025 அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று நடைபெற்ற அன்னதானத்தை பிரபல தொழிலதிபர் K.R. வெங்கடேசன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவன தலைவரும் வழக்கறிஞரமான இளைய கட்டபொம்மன், ஆசிரியர் தமிழன் வடிவேல் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து தென்னிலை கதிர் மாதம் இருமுறை இதழ், ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் வசந்தம் சமூக நல வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறோம்.
இன்றைய தினத்தில் சாலையோரம் உள்ள வயது முதிர்ந்த முதியோர்களுக்கு காலை உணவும், அதைத்தொடர்ந்து மாலை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள தென்னிலை கதிர் மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தின் கீழ் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.