
தென்காசியில் அனைத்து சமுதாய மக்களாலும் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று முடி சூட்டப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 12 வது ஆண்டு நினைவு நாளை நினைவு கூறுகின்ற வகையில் தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட பா சிவந்தி ஆதித்தனாருடைய திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தென்காசியில் அனைத்து சமுதாய மக்களாலும் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று முடி சூட்டப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார்.
அவர்களின் 12 வது ஆண்டு நினைவு நாளை நினைவு கூறுகின்ற வகையில் தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட பா சிவந்தி ஆதித்தனாருடைய திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர் அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது சுமார் 300 ஆண்டுகள் இடிந்து கிடந்த தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோவிலின் திரு கோபுரத்தை ராஜகோபுரமாக கட்டிக்கொடுத்து தென்னாட்டின் காசி என்று அழைக்கப்படும்.
தென்காசிக்கு பெருமை சேர்த்தவர் என்றும் வாசுதேவநல்லூர் ராஜகம்பள சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வீர ஜக்கதேவி பொம்மாத்தாள் திருக்கோவில் திருப்பணியை 1993 ஆம் ஆண்டு செய்து கொடுத்து கும்பாபிஷேகம் நடத்தியவர் கடையநல்லூர் அருள்மிகு முப்புடாதி அம்மன் திருக்கோவிலின் திருகோபுரத்தை கட்டி கொடுத்து 1997 இல் கும்பாபிஷேகம் நடத்தியவர் இதே ஆண்டில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதிஅம்பிகை திருக்கோவிலுக்கு யானை வாங்கி கொடுத்தவர்.
வாசுதேவநல்லூரில் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவி செய்தவர். 2002 ஆம் ஆண்டு புளியங்குடி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திருத்தேர் செய்து கொடுத்து திருத்தேர் வலம் வர செய்தவர்.
கோவில்களுக்கு மட்டுமல்ல தென்காசி மாவட்டத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஊர்களில் பள்ளிக்கூடங்களை கட்டிக் கொடுத்தவர் 50 க்கும் மேற்பட்ட ஊர்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு விழா நடத்துவதற்கு மண்டபங்கள் கட்டிக் கொடுத்தவர்.
இபப்படி தென்காசி மாவட்டத்தில் கல்விப் பணிக்காகவும் சமூகப் பணிக்காகவும் திருக்கோவில் பணிக்காகவும் செய்த சேவைகளை சொல்லிக் கொண்டே போகலாம் இவைகளை எல்லாம் மையமாக வைத்து தான் கடந்த 10 ஆண்டுகளாக தென்காசியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனாருடைய பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்.கடந்த ஆட்சியாளர்கள் செய்யாததை இப்போது இருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எங்களுடைய கோரிக்கையை ஏற்று தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்டுவார்கள் என்று நம்புகிறோம் என்றார் இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் சுப்பிரமணியன் தென்காசி வியாபாரி சங்க தலைவர் பரமசிவன் பொருளாளர் ரசூல்தீன் சிவந்தி நகர் தலைவர் ஜெயராஜ் தென்காசி மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார் தென்காசி மாவட்ட தலைவர் ராஜ் நயினார் மத்திய மாவட்ட தலைவர் முருகன் தேவிபட்டினம் அல்லி ராஜன் ராயகிரி கராத்தே செந்தில்குமார் குருசாமி நாடார் மதிவளன் ஜான் வர்கீஸ் ராஜா தவசி முத்து வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன் செயலாளர் சந்திரமதி ராஜா பொருளாளர் முகமது இப்ராஹிம் நாடார் கூட்டமைப்பு சுப்பிரமணியன் மோகன் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.