
சர்வோதீப் தொண்டு நிறுவன கலந்தாய்வு (ம)ஆலோசனைக் கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரி வளாகத்தில் சர்வோதீப் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 1995ம் ஆண்டு முதல் தேனி மாவட்டத்தில் சர்வோதீப் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
இத்தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை – எளியோர், விதவைகள், மாற்றுதிறனாளிகள், ஆதரவற்றோர், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது.
மேலும் இத்தொண்டு நிறுவனத்தின் சார்பில் தொழில்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இத்தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் “பில்லர்ஸ் மீட்” எனும் தலைப்பில் அருட்சகோதரி சர்வோ தீப் ஒருங்கிணைப் பாளர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் அன்புக்கரசன். வழக்கறிஞர்கள் மணி கார்த்திக், திருமலை வெங்கடேசன்,சதாசிவம், பொறியாளர்,ராமநாதன், அரசு ஒப்பந்ததாரர் பாண்டியராஜன், ராஜகோபால், ரோட்டரி பாஸ்கரன், நல்லாசிரியர் தாமோதரன், மகாராஜன், நூலகர்கள், சவடைமுத்து, விஸ்வாசம், மற்றும் சர்வோ தீப் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்.