
அதிமுக தமிழக அரசைக் கண்டித்து பிரச்சாரம்
உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் மாநில கழக அமைப்பு செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள் திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் செய்த செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் திண்ணை பிரச்சாரங்களில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக நகர் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன் தலைமையில் நகர் கழக செயலாளர் பூமாராஜா முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து மதுரை ரோடு, தேவர் சிலை வழியாக பேரையூர் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து திமுக அரசின் செயல்பாட்டில் உள்ள குறைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பரப்புரை மேற்கொண்டனர்.
இதில், நகர வழக்கறிஞர் லட்சுமணன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன்,மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திர பாண்டி,செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு, நகர் மன்றத் தலைவர் சகுந்தலா மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.