June 8, 2025
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பி எம் கிஷான் திட்டத்தில் குளறுபடியால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு.

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பி எம் கிஷான் திட்டத்தில் குளறுபடியால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2010 ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 10 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருப்பதாக ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது. அதேபோன்று தற்போது 2025 ஆம் ஆண்டு படி குறைந்தது தமிழகத்தின் மக்கள் தொகை 13 கோடியே இருக்கலாம் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அந்த வகையில் பார்த்தால் இன்றைக்கு விவசாயம் என்பது தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சியை பெற்றிருந்தாலும் மக்கள் மனதில் விவசாயம் ஒரு மிகப்பெரிய தொழிலாக கருதப்படுவதில்லை. காரணம் நவநாகரிகம் என்ற பெயரில் அமர்ந்து இருந்து சாப்பிட்டால் போதும் என்ற சூழ்நிலைக்கு விவசாயப் பணிகள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதெல்லாம் கவனித்த மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஏராளமான இலவசம் மின்சார திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில அரசு விவசாயிகளுக்கு மானியத்தோடு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாழும் விவசாயிகளுக்கு இந்திய மக்கள் பணத்தில் இருந்து விவசாயிகளை ஊக்கி வைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பி. எம்.கிஷான் மூலமாக வருடத்திற்கு ரூபாய் 6000 ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறது.

விவசாயிகளின் உழைப்புக்கும், உற்பத்தி பொருட்களுக்கும் ஏற்படும் நஷ்டத்தில் சிறு உதவியாக இருக்கட்டும் என்று மத்திய அரசு வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்படும் விவசாயிகளுக்கு தேவையான ஆவணங்கள் பட்டா நகல் மட்டும் இருந்தால் போதும் அதன் அடிப்படையில் ஆதார், வங்கி பாஸ்புக் மூலமாக விவசாயிகளுக்கு மானிய பணமான 4 மாதங்களுக்கு 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 3 தவணையாக 6000 ரூபாய் வழங்கி வருகிறது. இத்திட்டமானது 2018 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விவசாயிகளின் வங்கிக்கு எந்தவிதமான இடைத்தரவுகள் இன்றியும் லஞ்ச லாவண்யம் என்று விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட ஒரு உன்னதமான திட்டத்தில் தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமான குளறுபடியை அரசு அதிகாரிகள் செய்ததால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு பல கோடி தமிழக மக்களுக்கு கிடைக்காமல் அது ஒரு முறை தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது. இப்படி விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய பயனை தமிழக அரசு அதிகாரிகள் முறையாக விசாரித்து வங்கிக்கு பணம் செல்வதால் நமக்கென்ன நன்மை என்று கருத்தில் கொண்டு அதிகாரிகள் வேலை செய்யாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சில பட்டாக்கள் கூட்டு பட்டாவாக இருப்பதற்கு முறையான முகாந்திரம் கேட்காமலே அரசு அதிகாரிகள் விவசாயிக்குச் செல்லும் பணத்தை முடக்கி வைத்து விடுகிறார்கள்.

இப்படி பல்வேறு காரணங்களை சொல்லி தமிழக அரசு அதிகாரிகளால் தமிழக விவசாயிகளுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மனக்குமுறலை கண்ணீரோடு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து 58 கிராம பாசன விவசாயிகள் சங்க விருவீடு பகுதி துணைச் செயலாளர் இரும்புத்துறை கூறியதாவது:- தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கும் போது ஏராளமான விவசாயிகளுக்கு எந்த தங்கு தடை இன்றி பி எம் கிசான் திட்டத்தில் மானிய பணம் ரூபாய் 6000 ரூபாய் வருடத்திற்கு கிடைத்துக் கொண்டிருந்தது.

திடீரென்று கடந்த நான்காண்டுகளாக பல்வேறு காரணங்களைச் சொல்லி மத்திய அரசும், அதிகாரிகளும் எந்தவிதமான விசாரணையும் இன்றி விவசாயிக்கு வழங்கி வந்த திடீரென்று முன்னறிவிப்பின்றி மானிய பணத்தை நிறுத்தி விட்டார்கள்.

இதனால் பல கட்டத்தில் விவசாயிகள் வேதனையுடன் விவசாயத்தை பல்வேறு நஷ்டத்தில் தான் விவசாயம் செய்து வருகின்றனர்.

எனவே உரிய வகையில் முதலமைச்சர் அதிகாரிகளையோ, மத்திய அரசையோ முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசு வழங்கும் ரூபாய் 6 ஆயிரத்தை வருடத்திற்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சித்தர்கள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி கூறியதாவது:- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பி எம் கிஷான் திட்டத்தில் 4 மாதத்திற்கு ஒரு முறை பணம் வங்கி மூலமாக கிடைக்கப்பெற்று வந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளாக திடீரென்று பி எம் கிஷான் திட்டத்தில் வழங்கப்படும் பணம் நிறுத்தப்பட்டு விட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், நிலக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அதிகாரிகளிடமும், பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அணுக்கள் வாயிலாக கொடுத்தும் தற்போது 19ஆவது நிதி மானியம் கிடைத்த போது கூட எனக்கு விவசாய மானிய பணம் கிடைக்கவில்லை.

அதிகாரிகள் இது குறித்து முறையான விசாரணை இல்லாமல் தன்னிச்சையாகவே தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

எனவே எனக்கு மத்திய அரசு வழங்கும் மானிய தொகையான விவசாய பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தம்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் கூறியதாவது:- கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் பி எம் கிஷான் விவசாய மானிய தொகை பெற்று வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் எந்தவிதமான தகவலும் சொல்லாமல் திடீரென வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாய மானிய நிதியை நிறுத்தி முடக்கி வைத்து விட்டார்கள்.

இதனால் அரசாங்கம் வழங்கிய ரூபாய் 6 ஆயிரத்தை வைத்து விவசாயி மிகப்பெரிய அளவில் லாபமெல்லாம் அடைய முடியாது. ஏதோ உழவுப் பணி, தண்ணீர் பாய்ச்சுதல், சில விவசாயத்திற்கு தேவையான உபகரண பொருட்கள் பழுதடைந்தால் இந்த நிதி உதவியை வைத்து ஏதோ ஒரு விவசாய பணிக்கு உதவியாக இருந்தது.

ஆனால் இதை நிறுத்தியதால் நானும் தினந்தோறும் வேளாண்மை துறை அதிகாரிகளையும், வருவாய்த்துறை அதிகாரிகளையும அணுகி கேட்டால் நீங்கள் இ சேவை மையத்தை அணியி தான் விசாரித்துக் கொள்ள வேண்டும் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார்கள்.

எனவே தமிழக முதல்வர் இது குறித்து தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நிதியை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தற்போது ஆங்காங்கே விவசாயிகளின் கணக்கை அதிகாரிகள் கணக்கெடுத்தாலும் அது தவறான கணக்கை தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்களே ஒழிய முறையாக கிராமம் கிராமமாக சென்று கணக்கெடுக்கவில்லை என்ற கோரிக்கையும் முன் வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.