
ஆதரவற்ற மகளிருக்கு இலவச நாட்டுக்கோழி குஞ்சு.
மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் சமூகப் பணி அறக்கட்டளை பங்களிப்புடன் மகளிருக்கு இலவச நாட்டுக்கோழி குஞக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கால்நடைத்துறை இணை இயக்குனர் சுப்பையன் தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், மனித வள மேம்பாட்டு அதிகரி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர்நந்தகோபால் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட திருவாலவாயநல்லூர், சித்தாலங்குடி, சி.புதூர் கிராமங்க ளைச் சேர்ந்த விதவைகள் கணவ னால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களில் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இலவச நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கினார். இதில் உதவி இயக்குனர்கள் சரவணன் பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜிஎச் சி எல் சமூகப் பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் நன்றி கூறினார்.