
நிலக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் 20 பேர் கைது.
சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டாஸ்மார்க் ஊழல் சம்பந்தமாக ஆர்ப்பாட்டம் செய்ய இருந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

இதனை அறிந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய தலைவர் லட்சுமணன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசே திமுக அரசே விடுதலை செய் விடுதலை செய் அண்ணாமலையை விடுதலை செய் என கோஷங்கள் எழுப்பினர்.
இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்து நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து பின்னர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றிய தலைவர் சுந்தர்ராஜன், நிலக்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் கருப்புசாமி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜ்குமார், ஒன்றிய பொதுச் செயலாளர் சிவா,தெற்கு ஒன்றிய பொருளாளர் தவமணி உட்பட 20க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.