
பழனி அருகே தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி கொய்யா சந்தை வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை அகற்ற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போதைகளுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றன.

தொடர்ந்து இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா, கழக இணைச் செயலாளர் விஜய்சிவா, மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன் , பேரூர் செயலாளர் மணிகண்டன், நகரச் செயலாளர் மீதுன், மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜ் மற்றும் மகளிர் அணி கலைச்செல்வி, சுபாஷினி, நாகராணி, விஜயலட்சுமி, சந்தான லட்சுமி, இளைஞர் அணி பிரவீன்.ஆசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு போதைகளுக்கு எதிராகவும் மகளிர்க்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்தியும் மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.

மேலும் தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மாணவிகள் பல்வேறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதை கண்டிக்கும் விதமாகவும் தமிழக அரசு பெண்களுக்கு என்று சிறப்பு சட்டங்கள் இயற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பெண்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு மகிழ்ந்தனர்.