June 8, 2025
நிலக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தின விழா 2026 இல் சட்டமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் அதிமுக வெற்றி பெற பாடுபடுவோம் என உறுதிமொழி.

நிலக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தின விழா 2026 இல் சட்டமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் அதிமுக வெற்றி பெற பாடுபடுவோம் என உறுதிமொழி.


நிலக்கோட்டை, பிப்.25 – திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோடு, தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு முன்னாள் முதலமைச்சர், அதிமுக கட்சி முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதா 77 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் விழா நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது.

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர், முன்னாள் திண்டுக்கல் எம்.பி .உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். நிலக்கோட்டை நகரச் செயலாளர் வி.எஸ்.எஸ். சேகர் வரவேற்று பேசினார்.

விழாவில் நிலக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் பேசியதாவது:- தமிழகத்தில் நடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கிய அனைத்து நல திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமா தமிழக முழுவதும் வன்முறை, கொள்ளை, கொள்ளை பாதுகாப்பு என்பது பெண்களுக்கு இல்லவே இல்லை என்ற சூழ்நிலையில் பதட்டமான பூமியாக தமிழகம் உள்ளது. தமிழக மக்கள் வருகிற சட்டமன்றத் தேர்தல் 2026 இல் இன்றைக்கு அன்போளப்படும் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது எங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஆகையால் இந்த பூமியில் அமைதி பூங்காவான அன்றைய தமிழகம் இன்றைக்கு பெண்கள் வெளியே வர முடியாத அளவுக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. காவல் நிலையத்திற்கு உள்ளே சென்று ஒரு உயர்மற்ற பெண் காவலரை தாக்கி இருக்கும் சம்பவம் சட்ட ஒழுங்கு தறி கெட்டுப் போச்சு என்பதற்கு உதாரணம்.

எனவே வருகிற 2026 இல் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கடுமையாக பாடுபட்டு அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்ன இந்த நேரத்தில் உறுதிமொழியும், இதற்காக தீவிரமாக பாடுபடுவோம் என பேசியும், உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

இவ்விழாவில் அம்மைய நாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜெயசீலன்,சீனிவாசன், முனி ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் தவமணி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன்,நகரப் பொருளாளர் பூக்கடை சரவணன்,நிலக்கோட்டை ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், நகர பொறுப்பாளர் மோகன் குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கனி குமார்,மாவட்ட பிரதிநிதி சேசுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி,கிழக்கு ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரேசன்,மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் முஸ்தபா, நிலக்கோட்டை எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முனியப்பன், அதிமுக துள்ளுபட்டி கிளைச் செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.