June 9, 2025
வாடிப்பட்டியில் கராத்தே பயிற்ச்சி தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்

வாடிப்பட்டியில் கராத்தே பயிற்ச்சி தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்

மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி மீனா ட்சி நகரில் , ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பாக 27வது ஆண்டு கராத்தே கருப்புபட் டை மற்றும் வண்ண நிற பேல்ட்கள் தேர்வும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவிற்கு, பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கி, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். வி. எம் .பள்ளி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

பயிற்சி பள்ளி நிர்வாகி சென் சாய் கணேசன் வரவேற்றார். இதில், கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பட்டைகள் தேர்வும் நடந்தது.இந்த போட்டியின் நடுவர்களாக பயிற்சியாளர்கள் செல்வகணேஷ், சந்துரு, ஷாலினி, மோனிஷ், இருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசும் வழங்கப்பட்டது.

இதில் , ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பயிற்சியாளர் சென்சாய் செல்வகணேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.