June 9, 2025
நிலக்கோட்டையை அருகே தண்ணீர் கேன் வாங்கும்போது ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேர்கள் கட்டையால் அடித்துக் கொலை தூண்டி விட்ட 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

நிலக்கோட்டையை அருகே தண்ணீர் கேன் வாங்கும்போது ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேர்கள் கட்டையால் அடித்துக் கொலை தூண்டி விட்ட 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

நிலக்கோட்டை, பிப்.20-
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கொன்னம்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை மற்றும் மனோகரன் இருவருக்கும் கட்டிட வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த நவீன் (22) என்பவர் கடையில் தண்ணீர் கேன் வாங்கிய போது ஏற்பட்ட 300 காரணமாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் வழக்கம்போல் முன்விரோதத்தோடு நவீன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வாய் தகராறு செய்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இரவு வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அழகுமலை, மனோகரன் ஆகியோரை நவீன் கட்டையால் தலையில் பயங்கரமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி 2 பேரை கொலை செய்த நவீன் நாடகமாடி வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை அறிந்த வத்தலகுண்டு போலீசார் அரசு மருத்துவமனைக்குச் சென்று 2 பேர்களை கொலை செய்த நவீன் பிடித்து கொலை குறித்து விசாரணை செய்த போது கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்டிக்கடையில் தண்ணீர் கேன் வாங்கிய போது ஒருவருக்கு ஒருவர் தகராறு செய்து கொண்டோம். அதில் என்னை கடுமையாக மனோகரன் மற்றும் அழகுமலை ஆகியோர்கள் தாக்கி விட்டார்கள்.

இதனால் எனக்கு ஆத்திரம் இருந்தது. அதை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் காத்துக் கொண்டிருந்தேன். அதன்படி நேற்று இரவு அவர்கள் இரண்டு பேரும் வந்ததைப் பார்த்து கோபம் அதிகமாக வந்தது கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து இருவரையும் சரமாரியாக அடித்தேன்.

அதில் இரண்டு பேரும் உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக் கிடந்தனர். இதை அறிந்த நான் மனோகரன், அழகுமலை ஆகியோர்கள் என்னை அடித்து விட்டதாக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். 2 கூலித் தொழிலாளர்களை அடித்துக் கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.