June 9, 2025
திருப்பரங்குன்றத்தில் நோட்டீஸ் வழங்க நீதிமன்ற அனுமதி:

திருப்பரங்குன்றத்தில் நோட்டீஸ் வழங்க நீதிமன்ற அனுமதி:

மதுரை,
திருப்பரங்குன்றத்தின் பெருமைகளைப் பாதுகாப்போம் – கொடிய விசம் கக்கும் மதவாத பிரச்சாரத்தை ஒதுக்கி வைப்போம் அமைதி நிலவும் நமது பாரம்பரியத்தைக் காப்போம் என, இந்திய மாணவர் சங்கம் சார்பாக, திருப்பரங்குன்றத்தில் நோட்டீஸ்-வழங்க, போலீஸ் தடை நீதிமன்ற அனுமதி பெற்று வழங்க வேண்டும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்திய மாணவர் சங்கம் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் அமைதியை நிலவும் நமது பாரம்பரியத்தை காப்போம் என,
நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது .

அதில், திருப்பரங்குன்றத்தில் பல நூறு ஆண்டுகளாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக அவரவர் வழிபாட்டு தலங்களில் வழிபட்டு வருகிறார்கள்.

திருப்பரங்குன்றத்தில் இந்து, இஸ்லாம் வழிபாட்டுத்தளங்கள் குறித்த வழக்குகளை தீர ஆய்வு செய்த நீதிமன்றங்களும்; அவரவர் வழிபாட்டுத்தளங்கள் அவரவருக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றன.

பௌத்தம், சமனம். இந்து, இஸ்லாம் கிறித்துவர் என்று மக்கள் பல்வேறு இறை நம்பிக்கையையும், பல்வேறு வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வந்தாலும் அனைத்துமே வேண்டுதல் தான். ஒவ்வொறு மதங்களுக்கு பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. ஒரே மதத்திலும் வேறுபட்ட வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அமைதியாக வேண்டுவது.

உள்ளம் உருகப்பாடுவது, சாமியாடுவது. நேர்த்திக்கடன் தலை முடியைத் தருவது துவங்கி ஆடு, கோழிகளை தருவது வரை எத்தனையோ வேண்டுதல் முறைகள் இருக்கின்றன.

இது இன்று நேற்று அல்ல நமது தாத்தன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகள் தான். அவ்வாறு நேர்த்திக்கடனாக ஆடு, கோழியைக் கொடுத்து வழிபடும் முறை சிக்கந்தர் தர்காவிலும் பின்பற்றப்படுகிறது.

குலதெய்வங்களை வழிபடுகிற மக்களின் மரபோடு ஒன்றிணைந்துள்ள இந்த வழிபாட்டு முறையை நானூறு ஆண்டுகள் கடந்து திடீரென பிரச்சனை ஆக்குவதன் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் மக்களின் அன்றாடப் பிரச்சனைகள், கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிகள், பொருளாதாரச் சுமைகளைப் பற்றி பேச முன்வராத இவர்கள், மக்களை மத ரீதியாக திரட்டி மக்களின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குன்றத்தின் பல தெருக்களில் சகோதரர்களாக வாழ்ந்து வருகிற மக்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர்.

வழிபாட்டு உரிமைக்கும். உணவு உரிமைக்கும் எதிரானதாக இவர்கள் திருப்பரங்குன்றத்
தையும். அதன் மக்களையும் பிரிக்க முயலும் அரசியலை முன்னெடுக்கிறார்கள். மக்கள் ஒற்றுமையாக இருந்தாலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து திருப்பரங்குன்றத்தை பதட்டத்தின் அடையாளமாக, பிரிவினையின் அடையாளமாக மாற்ற நினைக்கும் இவர்களை தனிமைப்படுத்தி மக்கள் ஒற்றுமையை நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும்.
இது ஏதோ இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல அனைத்து சமயங்களையும் சார்ந்த அடித்தள உழைப்பாளி மக்கள் ஆடு, கோழி நேர்த்திக்கடன் கொடுத்து வழிபாடு நடத்தும் பழக்கத்திற்கு முடிவு கட்டும் நோக்கம் கொண்டதாகும்.

மதவெறி அமைப்புகளால் தொழில் நகரம் கோவை அமைதி இன்றி பல ஆண்டுகள் தவித்தது தமிழ்நாட்டின் அனுபவம்.

எந்த மதவெறியும் மனிதத்திற்கு எதிரானது என்பதை நாம் உரத்துச் சொல்கிறோம். திருப்பரங்குன்றம் இந்தியாவின் பெருமைமிகு சமய நல்லிணக்கத்தின் அடையாளம் மத வெறியர்களின் சூழ்ச்சிகளைக் கடந்து அமைதியும், நிம்மதியுமாக மக்கள் கூடி வாழும் பாரம்பரியத்தின் உறைவிடம். திருப்பரங்குன்றத்தின் பெருமைமிகு பாரம்பரியம் காப்போம்! மத வேறுபாடுகள் கடந்த மனிதம் போற்றுவோம் ! மக்கள் ஒற்றுமைக்காக
என, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.