
பள்ளபட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளிக்கு ஆய்வகம் கூடுதல் பள்ளி அறை கட்டிடம் கட்ட ரூபாய் 51 லட்சம் மதிப்பில் பூமி பூஜை தி.மு.க .தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி நூறாண்டுகளுக்கு மேலானதால் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கூடுதல் வகுப்பறை, ஆய்வக அறை கட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனை ஏற்று தமிழக அரசு நபார்டு திட்டத்தின் கீழ் புதிதாக பள்ளபட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிக்கு ரூபாய் 51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அவரைத் தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நிலக்கோட்டை தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
பூமி பூஜையை தொடங்கி வைத்து தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் பேசியதாவது:- தமிழக முதல்வர் அரசு கள்ளர் பள்ளி வளர்ச்சிக்கு மிகுந்த அக்கறை எடுத்து செயல்படுத்தி வருகிறார்.
அதே சமயம் நமது கிராமங்களில் உள்ள குழந்தைகளை ஆங்கில மோகத்தில் ஆங்கில பள்ளிகளில் சேர்க்காமல் நமது அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், அரசு பள்ளிகளுக்காக பல கோடி ரூபாயை மாணவர்களுக்கு செலவழித்து கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள்.
இது அறியாமல் கிராம மக்கள் ஆங்கில மோகத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் கட்டி படிக்க வைக்கிறோம் என்று குழந்தைகளுக்கு ஏராளமான தமிழ் கல்வியை தற்போது கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. எனவே பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும் அனைத்து பரப்பினரும் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மீனாட்சி, திமுக ஒன்றிய துணை செயலாளர் வெள்ளிமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் அம்மாவாசை, தியாகு, திமுக கிளை பொறுப்பாளர்கள் தங்கம், கருப்பு, நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மகளிர் அணி நிர்வாகிகள் கனகவள்ளி, சுகன்யா, ரேகா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.