June 9, 2025
காரத்தொழுவு ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க பூமி பூஜை

காரத்தொழுவு ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் காரத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட காரத்தொழுவு அழகுநாச்சி அம்மன் கோயில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் , திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கட்சியின் செயலாளருமான மகேந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

மேலும் காரத்தொழுவு ஊராட்சி முள்ளங்கிவலசு பகுதியில் ரூ.17.50 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும் , துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் ரூ.7.20 லட்சம் மதிப்பிலும் , பாறையூரில் ரூ.7.20 லட்சம் மதிப்பிலும் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன் , கைத்தறி பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன் (எ) கோபாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், கணியூர் பேரூராட்சி செயலாளர் சரவணன் , ஒன்றிய புரட்சித்தலைவி பேரவை செயலாளர் செல்வகுமார் , ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயந்தி பாலசுப்பிரமணி , ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் ஆறுமுகம் (எ) தங்கராசு , ஒன்றிய புரட்சி தலைவி பேரவை செயலாளர் கிருபானந்தம் , சின்னக்காம்பாளையம் பேரூர் கழக செயலாளர் சுகன் குமார், சின்னக்காம்பாளையம் பேரூர் மன்ற துணைதலைவர் சுரேஷ்குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர் , ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வகுமார் , ஒன்றிய நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.